rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
BLOGS
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
bala murugan
Categories
Blogs
Poetry
Thoughts
Photography
Art
Philosophy
A MOMENT OF JOY
jokes
Meditation
FRIEND
tamil
Tamil Poetry
intrest thinking
Books
Tamil Blogs
Favourites 1
kavish rose
What is an RSS feed?
RSS Feed 
balaengg1.rediffiland.com/  
Friday 29 August, 2008
By  bala murugan   15:05 | 11/Nov/2007 |  1 Comment(s)
  Add bala murugan as Friend     Write to bala murugan     Forward this link
நினைவுகளிலĮ 1; பெளர்ணமி நிஜத்தில் அமாவாசை


நான் படித்தததில் பிடித்தது உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே!!!!!!!!!...................

ஜன்னலின் வழியே கற்பனை வானில்
பெளர்ணமி நிலவை ரசிப்பதாய்
உன்னை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்
நமக்குள் மன்னிக்கவும்
எனக்குள்ளும் நேசம் என்னும் விதையை
விதைத்து சென்றவன் நீதானா.........
அறிமுகம் ஆகாமலேயே முதன்முதலில் செல்லமாய்
நீ தந்த புன்னகைக்குள்
என்னை நான் தொலைத்துவிட்டேனா....!!!
கணினி வேகத்தையும் மிஞ்சிவிடும்
உன் துறுதுறு பேச்சில்தான் எத்தனை வேகம்
உன் வித்தியாசமான செய்கைகள்
அனுமதில்லாமல் என்னை ஆக்ரமித்ததோ
உன்னருகே வர வெட்கப்பட்டு தொலைவிலேயே
உன்னை கடக்கும் கணங்கள்கூட
என் மனம் பஞ்சாய் பறந்ததே
கடைகடையாய் தேடி
உன் மோதிரத்தைப்போன்று வாங்கி அணிந்தபோது
ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி
நீ தெரியாமல் விட்டுச் செல்லும்
துண்டு காகிதங்கள்கூட பொக்கிஷமாய்
என் அலமாரிக்குள் அரங்கேற்றம் செய்தனவே
உன்னைவிட உன் கையெழுத்தை அதிகமாய்
போட்டு பழகியவள் நான் தானோ
நீ தேர்வில் தோற்றபோது
என் கண்ணில் அல்லவா நீர் வழிந்தது
உன் பிறந்தநாளுக்கென்று அலைந்து வாங்கிய
வாழ்த்து அட்டைகள் பரிசுப்பொருட்கள்
உன்னிடம் வர துடித்து குவியலாய்
அலமாரிக்குள் அடைப்பட்டதே
நீ தற்செயலாய் என்னைப் பார்க்கும்
சமயங்களில்கூட பூகம்பமே ஏற்பட்டதுபோன்று
நான் திகைத்த நொடிகள்
இப்படி எத்தனை எத்தனையோ நடந்தேறின
இறுதியாய் மென்று விழுங்கி
என் காதலைச் சொன்னபோது மன்னிக்கவும்
என் வாழ்வை அர்ப்பணித்தப்போது
பேசாமல் பழகாமல் காதலா
நீ யாரென்றே தெரியாதே புயலாய்
உன்னடமிருந்து வந்த சொற்கள்
என் வாழ்வை அடித்து சென்றது
இதுதான் ஒருதலைக்காதலா
மெது மெதுவாகவே புரிகிறது
என் அலமாரியில் உன்னை எண்ணி
பொக்கிஷப்படுத்தினவைகளைகூட
என்னால் எறிந்துவிடமுடியாது
பின் இதயத்தில்
உன்னையே எண்ணி உருகி உருகி
சேமித்த காதலைதான்
ஒரு நொடியில் எறிந்துவிடமுடியுமா........??
இன்பமான நினைவுகளை ஏற்கும் இதயம்
துன்பமான நினைவுகளை ஏற்க மறுக்கிறதே
விழியில் வ்ழியும் கண்ணீரால் கற்பனை கலைந்து
நிஜ உலகத்துக்கு வருகிறேன்
விழிகள் வானில் வெண்ணிலவைத் தேடுகின்றன
அப்பொழுதுதான் இன்று அமாவாசை என்று
கண்களுக்குப் புரிகிறது
இதயமோ இன்று மட்டுமல்ல என்றும்தான்
அமாவாசை என்று புரிய மறுக்கிறது

Category: Tamil Poetry | Permalink